Sunday, December 1, 2013

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்படும் பி.எட். 2014-ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை வருகிற 31-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக்கல்வி இயக்கக இயக்குனர் (பொறுப்பு) பாஸ்கரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்படும் இளங்கல்வியியல் (பி.எட்.) 2014-ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விண்ணப்பங்களை தமிழ்ப்பல்கலைக்கழக வாகை வளாகம் மற்றும் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகில் மன்னர் சரபோஜி கல்லூரி எதிரில் புதிய வீட்டுவசதி வாரியம் குறிஞ்சி நகர் தகவல் மற்றும் சேர்க்கை மையத்தில் பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பங்கள் விற்பனை வருகிற 31-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. விண்ணப்பங்களை கல்வி மற்றும் தகவல் மையங்களில் பெறலாம். கல்வி மற்றும் தகவல் மைய முகவரி மற்றும் பிற விவரங்களுக்கு இணையதளத்தில் பார்க்கலாம். பிற பாடங்களான இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ், தொழிற்முறை படிப்புகளுக்கான 2013-14 கல்வியாண்டு சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment